search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாச பேச்சு"

    • குமணன் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார்.
    • குமணன் பேச்சை இளம்பெண் செல்போனில் பதிவு செய்து தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த இரும்புலியூர்,ஜெருசலம் நகரை சேர்ந்தவர் குமணன்(47). அ.தி.மு.க.வில் 53-வது வார்டு வட்ட செயலாளராக உள்ளார்.

    இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கணவரை பிரிந்து வாழும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் வசித்து வருகிறார். அவருக்கு குமணன் பண உதவி செய்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு குமணன் அடிக்கடி தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இது தொடர்ந்து நீடித்ததாக தெரிகிறது.

    இதையடுத்து அவரது பேச்சை அந்த இளம்பெண் செல்போனில் பதிவு செய்து தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. வட்டச் செயலாளர் குமணனை கைது செய்தனர்.

    • ஊராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் ஊராட்சி செயலர் புகார் செய்தார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் தோப்பூர் ஊராட்சி அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று அந்த அலுவலகத்திற்கு அதேபகுதியைச் சேர்ந்த மணி மகன் கதிர்வேல் என்பவர் வந்தார். ஊராட்சித் தலைவரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த அவர், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு ஊராட்சி தலைவரை ஆபாசமாக பேசி கேலி கிண்டல் செய்தாராம். மேலும் வெளியே வந்து தெருவில் உள்ள குழாயையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் ஊராட்சி செயலர் வேல்முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவிகளிடம் ஆபாசபேச்சு விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் சத்திய சேகரன் என்பவர் மாணவிகளிடம் செல்போ னில் ஆபாசமாகவும், சாதிரீதியாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பேராசிரியர், மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகாரின் பேரில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபாசமாக பேசுதல், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தல் என்பது உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பேராசிரியரை தேடி வருகின்றனர்.

    மேலும் பள்ளி-கல்வித்துறை சார்பில் பேராசிரியர் சத்தியசேகரன் மீதான புகார்கள் மாணவ-மாணவிகளிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. இதுதவிர, அந்த பேராசி ரியர் மீது பள்ளி கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுப்பதற்காக மூத்த பேராசிரியர்களை கொண்ட 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பான அறிக்கையை வருகிற 17-ந் தேதிக்குள் அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் பரமக்குடி அரசு கலைக்கல்லூரிக்கு மறுதேதி அறிவிக்கப்படாமல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • பன்னீர்செல்வம் புதுச்சேரி சிறைத்துறையில் ஜெயில் சூப்பிரண்டாக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர்.
    • தந்தையை பார்க்க ஹேமாவதி தினமும் சைக்களில் சென்று வருவது வழக்கம்.

    புதுச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் வேலங்குடியை சேர்ந்தவர் ஹேமாவதி (வயது 38). இவரது கணவர் சிவராஜா. இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.  ஹேமாவதியின் தந்தை பன்னீர்செல்வம் புதுச்சேரி சிறைத்துறையில் ஜெயில் சூப்பிரண்டாக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். இவர் காரைக்காலை அடுத்த நெடுங்காட்டில் வசித்து வருகிறார். தனது தந்தையை பார்க்க ஹேமாவதி தினமும் சைக்களில் சென்று வருவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஹேமாவதி சைக்கிளில் தனது தந்தையை பார்க்க சென்றார்.

    அப்போது, மர்மநபர் ஒருவர், மோட்டார் சைக்களில் சென்று, ஹேமாவதியிடம் ஆபசமாக பேசி மோட்டார் சைக்களில் ஏறுமாறு கூறிய தாக தெரிகிறது. இது குறித்து, ஹேமாவதி நெடுங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹேமாவதி கூறிய மர்ம நபரின் அடையாளங்களை வைத்து திருவாரூர் மாவட்டம் பாவட்ட குடியைச்சேர்ந்த ரமேஷ் (39) என்பவரை கைது செய்தனர்.

    ×